Home இலங்கை காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – பிரதமர்

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசன சபையின் அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசியல் சாசனம் அமைக்கும் செயற்குழுவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அரசியல் சாசனம் தொடர்பிலான அறிக்கை தயாரிப்பதற்கு சுமார் ஒன்றரை ஆண்டு காலம் தேவைப்பட்டுள்ளது. ஒன்றரை அண்டு கால அவகாசம் தேவைப்பட்டாலும் விரைவில் இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளை  பேணிப் பாதுகாப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட முன்னதாகவே நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More