Home இலங்கை கொக்கிலாயிலுள்ள பாடசாலை ஒன்றில் வெடிப்பு – 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

கொக்கிலாயிலுள்ள பாடசாலை ஒன்றில் வெடிப்பு – 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

by admin


கொக்கிலாயிலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்கள் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெடிப்புச் சத்தத்தினால்  ஏற்பட்ட அதிர்ச்சி  காரணமாகவே குறித்த  எட்டு மாணவர்களும் மயக்கமடைந்துள்ள நிலையில்  மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் ஜெனட்நைட் ஜெல் எனப்படும்  வெடிபொருள் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

1 comment

மா.பிரபு July 18, 2017 - 11:35 am

சட்ட விரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் வெடிபொருள் என திருத்திக்கொள்க..

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More