Home இலங்கை மாநகர சபைக்கு மூன்று வருடமாக வாடகை செலுத்தாத தொலைக்காட்சி நிறுவனம் – செலுத்த வேண்டிய தொகை 10 இலட்சம்.

மாநகர சபைக்கு மூன்று வருடமாக வாடகை செலுத்தாத தொலைக்காட்சி நிறுவனம் – செலுத்த வேண்டிய தொகை 10 இலட்சம்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனம் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய 10 இலட்சத்து 16ஆயிரம் ரூபாய் பணத்த்தினை செலுத்தவில்லை என மாநகர சபை தெரிவித்து உள்ளது.

யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபைக்கு சொந்தமான கட்டடம் ஒன்றில் தொலைகாட்சி நிறுவனம் ஒன்று கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இயங்கி வருகின்றது.

குறித்த கட்டடத்திற்கான இதுவரை காலப்பகுதியான (2017 ஜூலை ) வாடகை பணமான 8 இலட்சம் ரூபாயும் , அதனை செலுத்த தவறியமைக்காக 80 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் , வரி பணம் 1இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் , தேசத்தை கட்டிஎழுப்பும் வரிப்பணம் 16 ரூபாய் பணத்தினை யாழ்.மாநகர சபைக்கு கட்டவில்லை என மாநகர சபை தெரிவித்து உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More