Home உலகம் இங்கிலாந்தின் டெவன் பகுதியில் விபத்தில் உயிரிழந்த இருவரும் இரட்டையர்கள்

இங்கிலாந்தின் டெவன் பகுதியில் விபத்தில் உயிரிழந்த இருவரும் இரட்டையர்கள்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இங்கிலாந்தின் டெவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இருவரும் இரட்டையர்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை பார்ன்ஸ்டேபிளிற்கு அருகில் உள்ள ஏ361 இல் இடம்பெற்ற வாகனவிபத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பலியாகியுள்ளதை உறுதிசெய்துள்ள அதிகாரிகள் பலியான இருவரும் இரட்டையர்கள் என குறிப்பிட்டு;ள்ளனர். கார் லொறியுடன் மோதி   ஏற்பட்ட விபத்தின் போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

விபத்து இ;டம்பெற்ற இடத்திலேயே தாய் பலியானார். அவரது 12 வயது மகள் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டவேளை இறந்தார்  எனவும் மகனும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் பிள்ளைகள் இருவரும் 12 வயது இரட்டையர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More