தெற்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் உயிரிழந்ததுடன், 100 பேர் வரை காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்கோப்ஜிக்கு கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோகானி நகரில் உள்ள ‘பல்ஸ்’ என்ற இரவு விடுதியில் இன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பொப் இசைக் குழுவின் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது சில இளைஞர்கள் வானவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் மேற்கூரை தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சிக்காக அங்கு1,500 பேர் வரை அங்கு கூடியிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.