Home இந்தியா வெடிகுண்டு மிரட்டல் காரணமாக எயார் இந்தியா விமானம் முன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது:-

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக எயார் இந்தியா விமானம் முன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டது:-

by admin

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக எயார் இந்தியா விமானம் முன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்ட சம்பவம் ஒன்று ஜோத்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.

ஜோத்பூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலாலேயே விமானம் புறப்படுவதற்கு தாமதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானதினைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் அனைத்து பயணிகளையும் விமானத்தில் இருந்து வெளியேற்றி விமானத்தை முழுமையாக சோதனையிட்டதன் பின்னரேயே விமானம் டெல்லி புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை மற்றும் இதர பாதுகாப்பு நிறுவனங்கள் அவரசமாக விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டமாகவும் சோதனையின் பின்னர் தகவல் பொய்யானது என உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More