Home இலங்கை புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதிக் காவல்துறை மா அதிபரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதிக் காவல்துறை மா அதிபரின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி   கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு  ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.எம். ரியால்   உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பிரதிக் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More