Home இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி:-

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி:-

by admin

கிழக்கு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பல்கலைக்கழகத்தின் நிர்வாக பகுதியை மாணவர்கள் ஆக்கிரமித்ததன் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் பகுதி மற்றும் நிர்வாகப்பகுதிகளை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும்,  இதன்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு, செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்கப்படுகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் சில பிரிவினர் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில், நேற்று பிற்பகலும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More