Home உலகம் அங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் மோசமான நிலையில் உள்ளது

அங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் மோசமான நிலையில் உள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இங்கிலாந்தின் விமானநிலையங்களில் அங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ  விமானநிலையமே மோசமான நிலையில் உள்ளது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது

பயணிகள் கௌரவமாக நடத்தப்படுவதில்லை எனவும்  இரண்டு மணிநேரத்திற்கும் மேல் அவர்கள் காத்திருந்திருந்துள்ளனர்  எனவும் பயணிகள் விமானபோக்குவரத்து அதிகாhரசபை தெரிவித்துள்ளது.
1200 அங்கவீன பயணிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது 62 வீதமானவர்கள் ஹீத்ரோ விமானநிலையத்தின் சேவைகள் மிகவும் மோசமானவை என தெரிவித்துள்ளனர்.

பயணிகள் சேவையை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை பல சந்தர்ப்பங்களில் காணப்பட்டுள்ளது எனவும் பயணிகளின் தேவைகள் பூர்த்திசெய்யப்படாததுடன் அவர்கள் கௌரவாமாக நடத்தப்படாத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவும் பயணிகள் விமானபோக்குவரத்து அதிகாhரசபை தெரிவித்துள்ளது.

பயணிகள் நீண்ட தூரம் பயணிக்கவேண்டிய நிலை விமானநிலையத்தில் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அதிகார சபை  அங்கவீனர்களான பயணிகள் இரண்டு மணித்தியாலங்களிற்கு மேல் காத்;திருந்த அனுபவங்களும் பதிவாகியுள்ளன எனவும் அதிகாhர சபை தெரிவித்துள்ளது.

மான்செஸ்டர் மற்றும் ஈஸ்ட் மிட்லான்ட் விமானநிலையங்கள் குறி;த்தும் அதிகார சபை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த விமானநிலையங்களும் அங்கவீனர்களிற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

விமானநிலைய பணியாளர்களின் அலட்சியம் காரணமாக பயணியொருவர் சக்கரநாற்காலியுடன் தனித்து விடப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக தான் தனது விமானத்தை தவறவிட்டதாக 62 வயது படி கொல்டெலோ என்பவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More