Home உலகம் கியுபாவில் கனடா இராஜதந்திரி திடீரென கேட்கும் திறனை இழந்துள்ளமை தொடர்பில் விசாரணை

கியுபாவில் கனடா இராஜதந்திரி திடீரென கேட்கும் திறனை இழந்துள்ளமை தொடர்பில் விசாரணை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கியுபாவில் பணியாற்றி வரும் கனடா இராஜதந்திரி  ஓருவர் திடீரென தனது கேட்கும் திறனை இழந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கனடா வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கனடா இராஜதந்திரி கேட்கும் திறனை இழந்துள்ளதுடன்  கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கியுபா தலைநகரில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகள் சிலர் இதேபோன்ற பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அமெரிக்கா அறிவித்து ஓரு சில நாட்களில் கியுபாவும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா இதற்கு பதில் நடவடிக்கையாக இரண்டு கியுபா இராஜதந்திரிகளை வெளியேற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கியுபாவில் உள்ள அமெரிக்க கனடா இராஜதந்திரிகளும் அவர்களது குடும்பத்தவர்களும் வழமைக்கு மாறான விதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம் என்றும் கனடா தெரிவித்துள்ளது.

எனினும் தற்போதைக்கு இதன் காரணமாக கனடா மற்றும்  அமெரிக்க சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என நாங்கள் கருதவில்லை என்றும் கனடா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கியுபா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. தனது மண்ணில் இராஜதந்திரிகளிற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கு ஓரு போதும் அனுமதிக்கப்போவதில்லை என கியுபா தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More