Home இலங்கை வாழைச்சேனை, முறாவோடை பகுதியில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம்

வாழைச்சேனை, முறாவோடை பகுதியில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம்

by admin

வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியாலயத்தில், மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்த மைதானக் காணியை மீட்பதற்கு, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமணரத்னதேரர் தலைமையில், இன்றையதினம் அப்பகுதிக்கு  சென்ற  பொதுமக்கள், காணி வேலியைப் பிடுங்க முற்பட்டமைமையை அடுத்து அங்கு   பதற்ற நிலையேற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை தடுத்து நிறுத்தியதாகவும்  எனினும் அதனையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் வேலை தகர்க்க முற்பட்டதாகவும் இதனையடுத்து காவல்துறை பாதுகாப்பு படையினரால் அம்பிடியே சுமணரத்னதேரர் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளாகிய பொதுமக்கள் மேலும் ஆவேசத்துடன்    வேலியை பிடுங்கிய போது, காவல்துறையினர்  குண்டாந்தடிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதன்போது  பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More