Home உலகம் ஆப்கானில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை

ஆப்கானில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆப்கானிஸ்தானில் தனது இராணுவளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பிரித்தானியா ஆராயும் எனினும் ஆப்கானில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து  இன்னமும் சிந்திக்கவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்

ஆப்கானிஸ்தானிற்கு மேலதிக படையினரை அனுப்பிவைப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரித்தானிய பாதுகாப்பு வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன

டிரம்ப் இந்த விடயத்தில் தன்னை பின்பற்றுமாறு கோரவில்லை என  பிரித்தானிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ள இதேவேளை அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற டிரம்பின் முடிவு பிரித்தானியாஉட்பட நேட்டோ நாடுகள் மீது அழுத்தங்களை கொடுக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதேவேளை ஆப்கானில் உள்ள தனது இராணுவ வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து  மறுஆய்வீனை மேற்கொள்வது குறித்து பிரித்தானியா சிந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் பலோன் டிரம்பின் முடிவை வரவேற்றுள்ள அதேவேளை டிரம்பை பின்பற்றுவது குறித்து எதனையும் தெரிவிக்கமறுத்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More