Home இலங்கை கேப்பாபுலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை

கேப்பாபுலவில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை

by admin


முல்லைத்தீவு   கேப்பாபுலவு கிராம மக்களை மீள்குடியேற்றுவதற்கேற்ப    இராணுவத்தினரின்  கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

குறித்த காணியை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்   இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்  மேலும் 111 ஏக்கர் காணியினை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அக்காணில் அமைந்துள்ள  இராணு முகாமை அமைப்பதற்கு  பிறிதொரு இடத்தில் ஸ்தாபிப்பதற்கு தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும்  கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More