Home இலங்கை யாழ் சித்தங்கேணி பகுதியில் பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

யாழ் சித்தங்கேணி பகுதியில் பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

by admin

யாழ் சித்தங்கேணி பகுதியில்   பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இன்று காலை  குறித்த பகுதியில் உள்ள மக்களால் இந்த  சடலமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள  வீடுகளில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தூர்வாடை  வீசியதனையடுத்து மேற்கொண்ட தேடுதலையடுத்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது  சில  தினங்களுக்கு முன்னர் சுளிபுரம் பகுதியில்   காணமல் போயிருந்ததாக காவல்நிலையத்தில்    முறைப்பாடு செய்யப்பட்டிருந்த 37 வயதான குகதாசன் தாரணி   என்பவருடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், கிணற்றுக்கு அண்மையில் இழுத்து சென்றது போன்ற அடையாளங்கள் தென்படுவதாகவும் காவல்துறையினர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More