Home இலங்கை கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களது உறவினர்களின் போராட்டம் தீர்வின்றி 200 வது நாளை எட்டியுள்ளது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களது உறவினர்களின் போராட்டம் தீர்வின்றி 200 வது நாளை எட்டியுள்ளது.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  போராட்டம் இன்று வியாழக்கிழமை இருநூறாவது நாளை எட்டியுள்ளது.  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களால் முன்வைக்கப்பட்ட  கோரிக்கைகள் எவற்றுக்கும்  தீர்வு கிடைக்காத நிலையில்   கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட   போராட்டம்  தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

கடந்த  20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரவு பகலாக  தொடர்கிறது.

ஜனாதிபதி மைதிரிபால  சிறிசேன இரண்டு தடவைகள் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து போதும்  காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் முன் வைத்த கோரிக்கைகள் எவற்றுக்கும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவு நியாயமான  நீதியான தீர்வு கிடைக்கும் வரைக்கும்  தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More