Home இந்தியா இந்தியாவின் முதல் புல்லட் ரெயில்:

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில்:

by admin

இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டம் அகமதாபாத் நகரில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர்  அடிக்கல் நாட்டி திட்டத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மணிக்கு 200 கி.மீ வேகம் செல்லும் டால்கோ ரெயில்கள் சோதனையில் உள்ளன.

மும்பை – அகமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் புல்லட் ரெயில் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மணிக்கு 320 கி.மீ வேகத்தில் புல்லட் ரெயில் பயனிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் நிறைவேற்றப்படும் இந்த திட்டமானது, 2022-23ம் ஆண்டில் முடிவடைந்து 2022-ம் ஆண்டு முதல் ரெயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நாளை ஒட்டி புல்லட் ரெயில் இயக்குவது எனவும், அதற்காக இந்த திட்டம் வேகமாக செயல்படுத்தப்படும் என்றும் ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு ஜப்பான் அரசு 88 ஆயிரம் கோடி ரூபா நிதியை 0.1 சதவீத வட்டியில் கடனாக அளிக்கிறது. இந்த நிதி 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும்.

508 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் தண்டவாளத்திலும், 27 கி.மீ. தூரம் தரைவழி சுரங்கத்திலும், 7 கி.மீ. தூரம் கடல் வழி சுரங்கத்திலும், 13 கி.மீ. தரையிலும் புல்லட் ரெயில் ஓடும்.

மும்பை – அகமதாபாத் இடையே 12 ரெயில் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரு நாளைக்கு சுமார் 70 முறை இந்த ரெயிலை இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 750 பயணிகள் ஒரே நேரத்தில் புல்லட் ரெயிலில் பயணம் செய்ய முடியும். ஆனால், பயணச்சீட்டு கட்டணம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More