Home இலங்கை அரசாங்கத்தை விமர்சனம் செய்த காரணத்தினால் அருந்திக்க பதவி நீக்கப்பட்டார் – நாமல் ராஜபக்ஸ

அரசாங்கத்தை விமர்சனம் செய்த காரணத்தினால் அருந்திக்க பதவி நீக்கப்பட்டார் – நாமல் ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்தை விமர்சனம் செய்த காரணத்தினால் அருந்திக்க பெர்னாண்டோ பதவி நீக்கப்பட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் அருந்திக்க பெர்னாண்டோ நீக்கப்பட்டிருந்தமை குறித்து  கருத்து வெளியிட்ட போது நாமல் ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்கு அருந்திக்க பெர்னாண்டோ முயற்சித்தார்  எனவும் அதன் பலனாக அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசாங்கத்தில் ஜனநாயகம் காணப்படுவதாக கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி ஆட்சி நடத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக் காட்டிய விஜயதாச ராஜபக்ஸ போன்ற அமைச்சர்கள் பதவியிழக்க நேரிட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More