Home இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதனைத் தவிர வேறு வழியில்லை – ஜே.வி.பி.

அரசாங்கத்தை கவிழ்ப்பதனைத் தவிர வேறு வழியில்லை – ஜே.வி.பி.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசாங்கத்தை கவிழ்ப்பதனைத் தவிர வேறு வழியில்லை என ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் மூட நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேறும் பல வழிகள் கிடையாது எனவும், அரசாங்கத்தை கவிழ்ப்பது மட்டுமே தீர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறினால், முழு வீச்சுடன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஜே.வி.பி நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கப் போராட்டங்களினால் தற்காலிக அடிப்படையில் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து மக்கள் கவலைபடக் கூடாது எனவும், நீண்ட கால அடிப்படையில் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More