Home இந்தியா ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்குமாறு மனு தாக்கல்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்குமாறு மனு தாக்கல்

by admin


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற  நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.கவைச் சேர்ந்த  முருகானந்தம் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து   ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற     நீதிபதி மூலம்  விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்பு நீதி விசாரணை தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   எனவே ஜெயலலிதா மரணத்தில் உண்மையை கண்டறிய ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டபடி ஓய்வு   உயர்நீதிமன்ற    நீதிபதியை உடனடியாக நியமித்து நீதி விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த  மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More