Home உலகம் விளையாட்டு வீரர்களின் எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி

விளையாட்டு வீரர்களின் எதிர்ப்பிற்கு ஆளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் நடவடிக்கைகளுக்கு, விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சுப்பர் போல் போட்டித் தொடரில் இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ள  ஓசி ஒமென்ஜியோரா   (  Osi Umenyiora  ) , ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய கொடியை நிந்திப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ட்ராம்ப் இனவாத கருத்துக்களை வெளியிட்டதனைத் தொடர்ந்து என்.எப்.எல் விளையாட்டு வீரர்கள் சிலர், ட்ராம்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும் போதும், கொடி ஏற்றப்படும் போதும் ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு கறுப்பின வீரர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தேசிய கீதத்திற்கு மரியாதை அளிக்கத் தெரியாத வீர வீராங்கனைகளை வெளியேற்ற வேண்டும் அல்லது இடைநிறுத்த வேண்டுமென ட்ராம்ப் கருத்து வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து என்.எப்.எல் போட்டிகளில் விளையாடி வரும் கறுப்பின வீரர்கள், தேசிய கீதம் இசைக்கும் போது எதிர் ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More