Home இலங்கை அரச நிறுவனங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு

அரச நிறுவனங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரச நிறுவனங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை மதிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் கோரப்பட்ட தகவல்களுக்கு அரச நிறுவனங்கள் பதிலளிக்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுமார் 100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் அறிந்து கொள்ளும் ஆணைக்குழுவின் உறுப்பினர் எஸ்.ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரச நிறுவனங்கள் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More