Home இலங்கை காங்கேசன்துறை கடற்பரப்பில் 153 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பரப்பில் 153 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

by admin

யாழ்ப்பாணம்; காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து  கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடந்படையினரால் மீட்கப்பட்ட இந்த  கஞ்சாவானது  153  கிலோ கிராம்  நிறை  கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக   பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலினையடுத்து  அங்கு சென்ற கடற்படையினர் குறித்த பொதியை மீட்டு Nhதனை மேற்கொண்ட வேளையிலேயே குறித்த  கேரள கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சாவினை  கடத்திவந்த நபர்கள் தமது  வருகையை அறிந்து அதை கைவிட்டு சென்றிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சா தற்போது யாழ் காங்கேசன்துறை காவல்துறையினரிடம்  கையளிக்கப்பட்டுள்ளதுடன், ; மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More