Home உலகம் வியட்நாமில் கனமழை காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியட்நாமில் கனமழை காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin


வியட்நாமில் பெய்து வரும்  கனமழை காரணமாக  ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி    37  பேர் உயிரிழந்துள்ளதாக   தெரிவிக்கப்படுகின்றது. வியட்நாமின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலச்சசரிவு மீட்பு பணிகளின் போது  பலரது  உடல்கள் ; மீட்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி மாயமான 40 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர் எனவும் வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More