Home இலங்கை வடக்கில் பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க இன்னும் இரண்டு வருடங்கள் தேவை :

வடக்கில் பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க இன்னும் இரண்டு வருடங்கள் தேவை :

by admin

வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க இன்னும்   இரண்டு வருடங்கள்  தேவை என  இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.  நேற்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்  சந்திப்பின் போது  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததன் பின்னரேயே குறித்த காணிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்கும் பணிகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு, வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணிகளை இழந்துள்ளவர்களுக்கு நட்ட ஈடு அல்லது மாற்று காணிகளை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அங்கு கருத்து தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன வடக்கில் பெருமளவிலான காணிகள் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன   எனவும் குறிப்பாக இதுவரை, 62 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன எனவும்  மீதமுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More