Home இந்தியா ‘புளூவேல்’ விளையாட்டு தற்கொலைகள் பற்றி விசாரிக்க குழு:

‘புளூவேல்’ விளையாட்டு தற்கொலைகள் பற்றி விசாரிக்க குழு:

by editortamil

புளூவேல் இணைய விளையாட்டால் ஏற்பட்ட தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக பல்வேறுதுறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றினை  இந்திய மத்திய அரசு அமைத்துள்ளதாக டெல்லி  மேல் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதினரை தற்கொலைக்கு தூண்டும்  இந்த புளூவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டத்தரணி குர்மீத் சிங் என்பவர் மேல் நீதிமன்றில்  பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது புளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கணிணி உள்ளிட்ட பல்வேறுதுறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது எனவும்  30 நாட்களில் விசாரணை அறிக்கையை அக்குழு தாக்கல் செய்யும் எனவும் மத்திய அரசு சார்பில் முன்னிலையான  சட்டத்தரணி ஜெனரல் சஞ்சய் ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேலும், இணையதள நிறுவனங்களான கூகுள், யாகூ மற்றும் வட்ஸ்அப், முகப்புத்தகம்  போன்றவற்றில் இருந்து புளூவேல் விளையாட்டு தொடர்பான இணைப்பை நீக்குமாறு தெரிவித்துள்ளதாகவும்  அந்த நிறுவனங்களும் இந்தக் கோரிக்கைக்கு இணங்கியுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More