116
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில், வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில், மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவன், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (14/03/2025) காலையில் இடம்பெற்றுள்ளதாக, ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பல்கலைக்கழகத்தில் வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. காயமடைந்த மாணவன், காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love