Home இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கைகலப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கைகலப்பு

by editorenglish

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில், வர்த்தகப் பிரிவு  இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில், மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவன், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை (14/03/2025) காலையில் இடம்பெற்றுள்ளதாக, ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. காயமடைந்த மாணவன், காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காவல்துறையின‌ர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More