Home இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

by admin

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்  விடுதலையை வலியுறுத்தி    மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  நேற்றையதினம்  மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

எதுவித விசாரணைகளுமின்றி  நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, வடக்கில் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டு  வருகின்ற போராட்டங்களுக்கு   ஆதரவாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகளின்   விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More