Home உலகம் கால்பந்தாட்டப் போட்டியொன்றின் போது இந்தோனேசிய வீரர் மரணம்

கால்பந்தாட்டப் போட்டியொன்றின் போது இந்தோனேசிய வீரர் மரணம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கால்பந்தாட்டப் போட்டியொன்றின் போது இந்தோனேசிய கழக வீரர் ஒருவர் மரணித்துள்ளார். இந்தோனேசிய முதல்தரக் கழகமொன்றின் கோல் காப்பாளரான சொய்ருல் குடா ( Choirul Huda ) வே இவ்வாறு துரதிஸ்டவசமாக போட்டியின் போது உயிரிழந்துள்ளார். 38 வயதான சொய்ருல கழக மட்டப் போட்டியொன்றின் போது சக வீரருடன் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட காயத்தினால் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியின் போது அவர் இவ்வாறு   உயிரிழந்துள்ளார். போட்டியின்போது பந்தை பிடிப்பதற்காக முயற்சித்த போது அணியின் சக வீரர் ஒருவருடன் மோதிக் கொண்டதில் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More