Home இந்தியா அர்ஜூன், சாரா பெயரில் போலி கணக்குகள்: நீக்கும்படி ருவீட்டர் நிறுவனத்திடம் சச்சின் வேண்டுகோள்:-

அர்ஜூன், சாரா பெயரில் போலி கணக்குகள்: நீக்கும்படி ருவீட்டர் நிறுவனத்திடம் சச்சின் வேண்டுகோள்:-

by editortamil

ருவீட்டர் பக்கத்தில் உள்ள, தனது மகள் மற்றும் மகனின் பெயரில் உள்ள போலியான கணக்கை நீக்கும்படி சச்சின் டெண்டுல்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் பெற்றுக் கொண்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவருடைய மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோரின் பெயர்களில் ருவீட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இருந்து சச்சின் டெண்டுல்காரின் மகன் மற்றும் மகள் ருவீட் செய்வதுபோல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறன. இதனால் சச்சின் டெண்டுல்கார் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். தனது மகன் மற்றும் மகள் ருவீட்டர் பக்கத்தில் இல்லை. அவர்களுக்கு கணக்குகள் கிடையாது என தெரிவித்துள்ளதோடு இந்த போலிக் கணக்குகளை உடனடியாக நீக்கும்படி ருவீட்டர் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More