Home இலங்கை ஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மையை மதித்து பேனைகளை பாவிக்க வேண்டும் – ஜனாதிபதி

ஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மையை மதித்து பேனைகளை பாவிக்க வேண்டும் – ஜனாதிபதி

by admin

ஊடகவியலாளர்கள்  மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி   தெரிவித்தார்.  சுயலாபத்துக்காக தவறு செய்யும் அரசியல்வாதிகளை பாதுகாத்து, அவர்களுக்கு ஊடகவியலாளர்கள் துதிபாடுவது மிகவும் துர்ப்பாக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று (19)   கொழும்பில்     நடைபெற்ற   நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வளவு தவறிழைத்தாலும் அவர்கள் தொடர்பில் குறிப்பிடாமல் இருப்பதும், எவ்வளவு   சரியானதாக இருந்தாலும் சிலரை இலக்கு வைத்து தாக்குவதனையும் இன்று ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது என தெரிவித்த ஜனாதிபதி   மக்களுக்காக சரியான, தரமான, பெறுமதியானவற்றை சமூகத்துக்கு வழங்குவது அடுத்த சந்ததிக்காக ஊடகவியலாளர்கள் தமது பேனா முனையினால் ஆற்ற வேண்டிய பணியாகும் எனவும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More