Home இலங்கை யாழ் பல்கலைகழகத்திற்கு இந்தியாவினால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு

யாழ் பல்கலைகழகத்திற்கு இந்தியாவினால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய அரசின்  90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் என்பன யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி விவசாய மற்றும் பொறியியல்  பீடங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று(23) முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் இடம்பெற்றது.

இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் இன்று  48 மில்லியன் ரூபாவுக்கு  இரண்டு அதி சொகுசு பேரூந்துகள், டபிள்கப் வாகனம், மற்றும் உழவு இயந்திரம்  என்பன இன்று பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மிகுதி தொகுதி வாகனங்கள், உபகரணங்கள் என்பன விரைவில் கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் இந்திய துணைத்தூதுவா் ஆர்.நடராஜன் பிரதம  விருந்தினராக கலந்துகொண்டு இவற்றை கையளித்துள்ளார். இதன் போது யாழ் பல்கலைகழக துணைவேந்தர் விக்கினேஸ்வரன், மற்றும் பொறியியல், விவசாய  பீடங்கள் உள்ளிட்ட பீடங்களின் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள், திணைக்களங்களின் தலைவா்கள், மாணவா்கள் ஆகியோh் கலந்துகொண்டனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More