Home உலகம் அமெரிக்க வங்கி மீது, பிரித்தானிய நிறுவனம் அபராதம் விதிப்பு

அமெரிக்க வங்கி மீது, பிரித்தானிய நிறுவனம் அபராதம் விதிப்பு

by admin

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க வங்கியொன்றின் மீது பிரித்தானிய நிறுவனம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் மெரில் லின்ச் ( Merrill Lynch    ) என்ற வங்கியின் மீது 35 மில்லியன் பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நிதிக்கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

குறித்த அமெரிக்க வங்கி 69 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்களை வெளியிடத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதிக் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்ட காரணத்தினால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More