குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லிணக்க செலயகத்தின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டில் நல்லிணக்கச் செயலகம் இரண்டாண்டு காலத்திற்கு நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆணைக்குழு நிறுவப்பட உள்ளது. நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் நாயகமாக மனோ தித்தவல்ல கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment