Home இலங்கை விமல் வீரவன்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் :

விமல் வீரவன்ச பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டுமென அண்மையில் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், கட்சியின் தலைவர் வெளியிட்ட கருத்துக்காக தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பாராளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்துமாறு ஏனைய தரப்பினரை தூண்டும் வகையில் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் இவ்வாறான ஜனநாயக விரோத கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என   சுட்டிக்காட்டியுள்ளார்.

விமல் வீரவன்சவின் கருத்துக்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கட்சியின் சார்பில் மன்னிப்பு கோருவதாக பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More