Home இலங்கை போதைப் பொருள் காரணமாகவே அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன – ஜனாதிபதி

போதைப் பொருள் காரணமாகவே அதிகளவு குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன – ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

போதைப் பொருட்களினால் அதிகளவில் நாட்டில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடை தர்மாசோக  வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குற்றச் செயல்களும், சட்டவிரோத நடவடிக்கைகளும் போதைப் பொருட்களினால் ஏற்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு குறித்து மாணவர் சமூகம் போதியளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் எதிர்கால சந்ததியை போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்க்கும் ஓர் சமூகமாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதன் மூலம் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More