179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சொற்ப அளவிலானவர்களின் தேவைக்காக பெரும்பான்மையினரின் தேவைகளை பூர்த்தி செய்யாமலிருக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஒரு சில நபர்களின் நடவடிக்கைகளினால் பெரும்பான்மையினருக்கு நன்மை ஏற்படுவதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தை சிலர் பிழையாக பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு நவீன தொழில்நுட்பத்தை பிழையாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக போலிப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love