Home இலங்கை கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து காண்காணிப்பதற்கு பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கை வருகின்றது

கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து காண்காணிப்பதற்கு பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கை வருகின்றது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் குறத்து கண்காணிக்கும் நோக்கில் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கைக்கு  வரவுள்ளது.  எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வர உள்ளனர்.
பங்களாதேஸில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக் குழு அமர்வுகளில் பங்கேற்றதன் பின்னர், பிரதிநிதிகள் இலங்கைக்கு  வர  உள்ளனர்.

தமது உரிமைகள் முடக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். புதிய அரசியல் சாசனம் குறித்த பாராளுமன்ற விவாதங்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களுக்கு 820 நிமிடங்களும், கூட்டு எதிர்க்கட்சியின் 53 உறுப்பினர்களுக்கு 210 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More