Home உலகம் ஏமன் அருகே ஹெலிகொப்டர் விபத்தில் சவூதி இளவரசர் உயிரிழந்தார்… அதிகாரப் போட்டியில் சதியா?

ஏமன் அருகே ஹெலிகொப்டர் விபத்தில் சவூதி இளவரசர் உயிரிழந்தார்… அதிகாரப் போட்டியில் சதியா?

by editortamil

ஏமன் அருகில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் சவூதி இளவரசர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவூதியிலுள்ள அசிர் மாகாணத்தில் ஏமன் எல்லையோரத்துக்கு அருகில் குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணம் செய்த சவுதி இளவரசர் மன்சூர் பின் முர்கின் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணம் செய்த அரச அதிகாரிகள் சிலரும் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான காரணம் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் தொடர்ந்து விபத்து இடம்பெற்ற பகுதியில் தேடுதல் பணி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது உயிரிழந்த இளவரசர் மன்சூர் பின் முர்கின், முன்னாள் சவூதி இளவரசர் முர்கின் பின் அப்துலசிஸ்ஸின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரச குடும்பத்தில் இளவரசர்களுக்கிடையே அதிகாரத்துக்கான போட்டி இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்சூர் பின் முர்கினின் மரணம் பல்வேறு தரப்பினர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான ஊழல் தடுப்பு கமிட்டி நேற்று உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்களை கைது செய்துள்ள நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More