Home இலங்கை கணவரை எரியூட்ட முனைந்த மனைவி – யாழ்.நகர் பாடசாலையில் பதட்டம்.

கணவரை எரியூட்ட முனைந்த மனைவி – யாழ்.நகர் பாடசாலையில் பதட்டம்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அதிபராக கடமையாற்றும் தனது கணவன் சில நாள்களாக வீட்டுக்கு வராத காரணத்தால் அவரை பாடசாலைக்குத் தேடிச்சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்ட முற்பட்ட பெண்ணால் யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் பதற்றம் ஏற்பட்டது.

யாழ். நகரப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடுமுறை தினங்களான மூன்று நாள்களும், தனது வீட்டுக்கு செல்லாமல் வேறு இடத்தில் தங்கியுள்ளார்.  இவர் கடந்த திங்கட்கிழமை வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்த மனைவி அவர் அன்றைய தினமும் வராத காரணத்தினால், நேற்று செவ்வாய்க்கிழமை நேராக அவர் பணியாற்றும் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

தன் உடமையில் மண்ணெண்ணையும் அந்தப் பெண் கொண்டு சென்றுள்ளார்.  நேராக அதிபரின் (கணவரின்) அலுவலகத்துக்குள் சென்ற அவர்,  தான் கொண்டு சென்ற மண்ணெண்ணையை கணவர் மேல் ஊற்றிவிட்டு தன் மேலும் ஊற்றியுள்ளார்.

அப்போது அவ் இடத்துக்கு வந்த ஆசிரியர்கள், அதை தடுத்து நிறுத்தி அந்தப் பெண்ணை ஆசுவாசப்படுத்தியுள்ளனர். பின்னர் அவ் இடத்துக்கு வந்த பழைய மாணவர்கள் அமைதிப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More