Home இலங்கை திருவையாறு சிறுவா் இல்லத்தை விட்டு ஓடிய சிறுவா்களால் பரபரப்பு

திருவையாறு சிறுவா் இல்லத்தை விட்டு ஓடிய சிறுவா்களால் பரபரப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி திருவையாறு பகுதியில்  அமைந்துள்ள  சிறுவா் இல்லம் ஒன்றில் இருந்து நேற்றிரவு  ஜந்து சிறுவா்கள்  இல்லதை விட்டு வெளியேறியமையினால்  பிரதேசத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.

நேற்றிரவு(15) குறித்த சிறுவா் இல்லத்திலிருந்து வெளியேறி அயலில் உள்ள காணிகளில் ஒழிந்திருந்த நிலையில்   கிராமத்து  இளைஞர்கள்  குறித்த சிறுவா்களை மீட்டு  விசாரித்துள்ளனர். இதன் போது இல்லத்தில் உள்ள தங்களுக்கு பொறுப்பானவா்கள் தாக்கியதனால்  தாங்கள் சிறுவா் இல்லத்திலிருந்து ஒடி  வந்து விட்டதாகவும்,   இரவு ஒன்று கூடலுக்கு தாமதமாகியும் செல்லாத காரணத்தினால் தங்களுக்கு கடுமையாக அடி விழுந்ததாகவும் சிறுவா்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு ஒரு சிறுவன் தனது கையில் ஏற்பட்ட  காயத்தை காட்டி அடித்ததால் ஏற்பட்ட காயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது சம்பவ இடதிற்கு வருகை தந்த சிறுவா் இல்ல  ஊழியர்கள் தாங்கள் சிறுவா்களை தாக்கவில்லை எனவும் இரவு ஒன்று கூடலுக்கு  சிறுவா்கள் சமூகம் தராது மரங்களில் ஏறியிருந்ததாகவும், சிறுவா்களை ஒன்று சேர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் போதே சிறுவா்கள் இல்லத்தை விட்டு  ஓடியதாகவும்  தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் கையில் ஏற்பட்ட காயம் அவா் மரத்திலிருந்து இறங்கும் போது ஏற்பட்ட காயம் எனவும் தெரிவித்தனா்.

இந்த நிலையில் மாவட்ட சிறுவா் நன்நடத்தை அதிகாரிக்கு தகவல் அனுப்பபட்டு அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததோடு சிறுவா்களை மீண்டும் சிறுவா் இல்லத்திற்கு அனுப்பி வைத்தாh். மேலும் தான் இன்றைய  தினம்(16) குறித்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More