Home உலகம் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை???

நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை???

by editortamil

ஊழல் வழக்குகளின் காரணமாக நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் 1990-களில் இரு முறை பிரதமராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக பனாமா ஆவணங்கள் தெரிவித்திருந்தன.

இந்த ஊழலில் நவாஸ் ஷெரீப் பதவியை பறிக்குமாறு அந்த நாட்டின் உச்சநீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.

மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் மகள் மற்றும் மருமகன்  ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு ஊழல் வழக்குகள் தொடுத்துள்ள நிலையில் அந்த வழக்குகளின் விசாரணையை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்பையும், அவரது குடும்பத்தினரையும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை தேசிய பொறுப்புடைமை அமைப்பின் லாகூர் பிரிவு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More