Home இந்தியா வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு – விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவு – விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்

by admin

வைகை அணையில் இருந்து பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர்  உத்தரவிட்டதைத் தொடர்ந்து மேலூரில்   மேற்கொண்ட  வீதிமறியல்  மறியல் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.     மேலூர் பகுதி விவசாயிகள்   தமது பகுதிகளுக்கு  தண்ணீர் திறக்க வலியுறுத்தி இன்று காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க  தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

நூளை 21ம் திகதி முதல் ஏழு நாட்களுக்கு, திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி அளவும், பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர்  வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டதனையடுத்து   மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக   விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More