Home இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை – ஜனாதிபதி ஆணைக்குழு

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை – ஜனாதிபதி ஆணைக்குழு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை தாம் எதிர்க்கவில்லை எனவும், விசாரணைத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்ட ரீதியாக தொலைதொடர்பு நிறுவனங்களின் ஊடாகவே தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத்  தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More