Home இலங்கை மூன்றாவது முறையாகவும் புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது இலங்கைக்கு :

மூன்றாவது முறையாகவும் புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது இலங்கைக்கு :

by admin

மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவித்து உலக சுகாதார தாபனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் விசேட விருதான புகைத்தலுக்கு எதிரான சர்வதேச தின விருது மூன்றாவது முறையாகவும் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

இம்முறை இவ்விருது புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான அதிகார சபைக்குக் கிடைத்துள்ளது. இன்று (23) முற்பகல் பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் வைத்து உலக சுகாதார தாபனத்தின் கிழக்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங் அவர்களினால் இவ்விருது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்கள் இவ்விருதை புகையிலை, மதுபானம் தொடர்பான அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோனிடம் கையளித்தார்.

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதார தாபனத்தினால் உலக சுகாதார தாபனத்தின் ஆறு வலயங்களினூடாக மதுபானம் மற்றும் புகையிலை ஒழிப்புக்கு நடவடிக்கை எடுத்துவரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மதுபானம் மற்றும் புகையிலைப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பில் இலங்கை இன்று உலகில் முன்மாதிரி நாடாகத் திகழ்வதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய கிழக்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி பூனம் கெற்றாபல் சிங் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More