Home இந்தியா வேலூரில் கிணற்றில் குதித்து நான்கு பாடசாலை மாணவிகள் தற்கொலை :

வேலூரில் கிணற்றில் குதித்து நான்கு பாடசாலை மாணவிகள் தற்கொலை :

by admin

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் பள்ளி என்ற அரச பாடசாலையில் நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு அப் பகுதியை பெரும்   சோகத்துக்குள்ளாக்கியுள்ளது.  11ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் தீபா, சங்கரி, மணீஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 60 அடி ஆழமான கிணற்றில் குதித்து இவர்கள்  தற்கொலை செய்துள்ளனர்.

உயிரிழந்த  மாணவிகளின் சடலங்களை பார்த்து பெற்றேர்கள் மற்றும் உறவினர்கள் அழுவது நெஞ்சை கரைய வைக்கும் விதமாக இருப்பதாக தமிழகத்தின் பத்திரிகை நிரூபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆசிரியர்கள்  கண்டித்தமையினாலும்  பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதாலுமே குறித்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More