Home இந்தியா குடியரசு தினத்தன்று சரக்கு விமானங்களை தகர்ப்போம் – மும்பை விமான நிலையத்தில் கடிதம்

குடியரசு தினத்தன்று சரக்கு விமானங்களை தகர்ப்போம் – மும்பை விமான நிலையத்தில் கடிதம்

by admin


குடியரசு தினத்தன்று சரக்கு விமானங்களை தகர்ப்போம் என ஐ.எஸ் இயக்கத்தின் பெயரில்    மும்பை விமான நிலையத்தில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலைய கழிவறையில் இன்று மாலை ஐ.எஸ் இயக்கம் எழுதியதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அதில், அடுத்தாண்டு குடியரசு தினத்தில் சரக்கு விமானங்களை தகர்ப்போம் என இருந்தனையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் அளித்தனர். சரக்கு பிரிவில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது.  எனினும் சந்தேகப்படும் வகையிலான  எவையும் சிக்காதநிலையில்  இது ஒரு போலி மிரட்டல் கடிதமாக இருக்கும் என மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More