Home உலகம் சவூதி அரேபிய இளவரசர் மிடாப் விடுதலை

சவூதி அரேபிய இளவரசர் மிடாப் விடுதலை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக அண்மையில் கைது செய்யப்பட்ட சவூதி அரேபிய இளவரசர் மிடாப் பின் அப்துல்லா  (Miteb bin Abdullah   )விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேசிய ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் இளவரசர் மிடாப் கைது செய்யப்பட்டிருந்தார்.  ஊழல் மோசடிகள் தொடர்பிலான நட்டத்தை செலுத்துவதாக இணங்கியதன் அடிப்படையில் இளவரசர் மிடாப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதாக வாக்குறுதி அளித்ததனைத் தொடர்ந்து இளவரசர் மிடாப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர்  மாதம் 4ம் திகதி 200க்கும் மேற்பட்ட இளவரசர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை சவூதி அரேபிய ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மேலும் மூன்று  பேரும் நட்டத்தை செலுத்துவதாக ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More