Home இலங்கை இந்தியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது

இந்தியாவுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது

by admin

இந்தியாவுடனான  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்   இலங்கை 7 விக்கெட்டுக்களால்  வெற்றியீட்டியுள்ளது.  தரம்சாலாவில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில்   இந்திய அணித்தலைவராக  ரோகித் சர்மா  நியமிக்கப்பட்டிருந்தார். நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பினை மேற்கொள்ள தீர்மானித்தது

இதன்படி  முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  39.2 ஓவரில் 112  ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது.  டோனி 65 ஓட்டங்களைப் பெற்றிருந்திருந்தார். இலங்கை அணி தரப்பில் லக்மல் 13   4 விக்கெட்டுக்களையும்  பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்தநிலையில்  113  என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை   20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் 25  ஓட்டங்களும் , டிக்வெலா 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.  இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர் குமார், பும்ரா, பான்ய்டா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களைவ வீழ்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More