Home இலங்கை தயாசிறி ஜயசேகரவின் கருத்து நகைப்பிற்குரியது – நாமல் ராஜபக்ஸ

தயாசிறி ஜயசேகரவின் கருத்து நகைப்பிற்குரியது – நாமல் ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விளையாட்டுத்துறை அமைச்சர்  தயாசிறி ஜயசேகரவின் கருத்து நகைப்பிற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நாமல் ராஜபக்ஸவும், பிரசன்ன ரணதுங்கவுமே சீர்குலைத்தனர் என நேற்றைய தினம் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டு எதிர்க்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைவதனை நான் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சிரேஸ்ட உறுப்பினர்கள் எனது பேச்சைக் கேட்டு செயற்படுகின்றார்கள் என்பது நகைப்பிற்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More