Home இலங்கை ஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் இக்ரம் உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியலில் எதிர்வரும் 28ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து  காவல்துறையினரால்  தேடப்பட்டு வந்தவர்களான முஸ்லிம் இளைஞரான இக்ரம் உள்ளிட்ட மூவர் கொழும்பு புறநகர் பகுதியில்வைத்து கடந்த 28ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த மேலும் மூவர் மறுநாள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்றும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

இக்கிரம் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள்  6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் காலத்தை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More